வெள்ளி, செப்டம்பர் 30, 2011

உள்ளே - வெளியே

கொடியில் தொங்கும்
சேலையின்
எம்பிராய்டரிபூவில்
சுடிதார் நாடாவில்
சட்டையிலாது
அலையும் ஹாங்கரில் ....
கட்டில்,அலமாரி
இடுக்கில்...அடியில்....


எங்காவது இருக்கலாம்

கண்ணாடியின்
பின்புறம் சாய்ந்தோ
துணிகளிடையே   
 படுத்துக்கொண்டோ 
இருக்கலாம் ....
மின்விசிறி 
இறக்கைகளோடு  சுழலாம் ...

குளிர்சாதனப் பெட்டியின்
மேல்கூட காத்திருக்கலாம்...

தைல வாடை
பிடிக்காது வெளியேறிய
கால்வலி....

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...