புதன், செப்டம்பர் 21, 2011

மழையும் குளிரும்...!


வார்த்தைச்சீதளம்
வருத்தும்போது
மௌனக்கம்பளி
இதம்...
மௌனக்கம்பளி
உருத்தும்போது  ....
சொல் விசிறி
பதம்...!
 
 
பருவக்காற்று
திசையின் உதவியால்
மழையைத் தீர்மானிக்கிறதா?
மன இருளில்
திசையே தெரிவதில்லை...
திசைகாட்டி ?
 
 
குளிரக் குளிர
பூமி
நனைக்கும் மழை
திசை தப்பி
ஆதவச்சூடு
அவிக்கப்பெய்து
 
ஆவி பறக்கிறது!

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...