ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

மின்அணு  தகனம் .


துக்கத்துக்கு 
உகந்த நேரமாய் 
இதுதான் இருக்கிறது ...


அவர் குடும்பத்துக்கு 
ஆறுதல் சொல்லும் 
சுமையின்றி 
சடங்கு சம்பிரதாய 
சர்ச்சைகளில் 
தலையிடுவதா வேண்டாமா 
தடுமாற்றம் இன்றி 

துக்கம் கேட்க 
அருகிருந்து 
வருவோர்க்கு வழிவிட 
நகர்ந்து நகர்ந்து ....
சொல்லாமல் 
வெளியேறும்வரை 
அலைபேசி அமைதிப்படுத்தி ....


வெளிப்படுத்தா துக்கம் ....
இனி மின்ன வாய்ப்பில்லா
அந்த அலைபேசிஎண்ணிலிருந்து
விம்மி வழிந்தது....!


நடுங்கும் விரல்நுனி
நீள்கிறது
அழி _கட்டளையிட

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...