வெள்ளி, செப்டம்பர் 30, 2011

நேற்று -இன்று-நாளை!


குழந்தைப் பார்வையில்
கவிதைகள்
எழுதேன்..

நண்பரின் ஆலோசனை!
எழுதலாம்தான்!

ஆனால்.......


உணர முடியவில்லை....
குழந்தைகள்
வெளியேறிவிட்டார்கள்

வீட்டிலிருந்தும்....
......மனதிலிருந்தும்...



மீண்டும்
வரும் பருவந்தானே...
நண்பரின் ஆறுதல்!

ஒருவேளை
அப்போது
கவிதை வெளியேறியிருக்கலாம்!

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...