புதன், செப்டம்பர் 21, 2011

மலர்கள் எங்கிருப்பினும் ...

சவ ஊர்வலத்தின்
முன்னே
மாலை சுமந்த வாகனம் !

சிறகடித்தபடி
முன்னேறும்
சில வண்ணத்துப்பூச்சிகள்

கொள்ளிச்சட்டி
பிடித்தவனுக்கு
கூடுதல் கவலை...

சுடுமோ ...படுமோ...
வண்ணத்துப்பூச்சிகளோ
மயானம்வரை
மரணத்தை
முன்மொழிவதுபோல் ....

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...