வெள்ளி, அக்டோபர் 07, 2011

இடைவெளி 


புலால் மறுக்க 
புரட்டாசி தேடும் 
உனக்கு 
ஆச்சர்யம்தான்...

தச்சுக் கோளாறோ
பூச்சுக் கோளாறோ
நாற்காலிக்கும்
தரைக்கும் -நடுவே 
நொடிக்கும் இடைவெளியில் 
ஈ ,எறும்பு 
ஏதும் நசுங்காதிருக்க
பிரார்த்தித்தபடியே
அமரும்
அவனைப்பார்த்து ...

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...