சனி, நவம்பர் 05, 2011

வாசமிலா மலராம்...


யாரோ சூடி வாடிக்கிடந்த
டிசம்பர் பூச்சரம்
மலரும் நினைவுகளை
ராமர் கலரில் விரித்தது...

கனகாம்பரம் டிசம்பர்பூ
நூறு(எண்ணி)
பத்துகாசுக்குத் தரும்
சுந்தராம்பா மாமியை
துரத்தித் தேடிய நாட்கள் ...
நடுத்தெருவுக்கு ஓடி
எண்ணிவாங்கி
கட்டிவைத்து 
பள்ளிக்கு ஓடி...

தேடிய நிறம் கிட்டாத 
சமரசத்தின் மீதான 
வெறுப்பில் 
ஒடித்துவந்து நட்ட 
டிசம்பர் குச்சியில்  
ரோஸும் ,ராமர் கலரும்
வெள்ளை-நீலக் கலபபுமாக
நூறு நூறாக 
கைவலிக்காமல் எண்ணி  
கனவில் குலுங்கிய பூக்கள்
வெள்ளை மொட்டு
வெளிப்பட்ட நாளில்
வாடி
வெளியேறின...

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...