செவ்வாய், நவம்பர் 08, 2011

உதிர்ந்தது....


நந்தியாவட்டை
கழுத்துவழி  நீண்டு
குறுகுறுக்க
திண்டாக மழுமழுத்த
திண்ணைக்கு
அப்புறம் நின்ற
பவழமல்லி
இந்தப்பக்கம் மட்டுமே
பூக்கவும் உதிரவும் வேண்டுமென
வேண்டுதல் ...

புது உரிமையே பழசாய்ப்
போன அடுத்தவீட்டு
அத்தையின்
அரைகுறை மனசிலான
அபூர்வ அனுமதி
"விளையாடினது போதும்
பூ பொறுக்குனது போதும் 
அப்புறம் வரலாம் 
போங்க ..போங்க..,


வெளியேறும் கணத்தில் 
ஒரு கேள்வி மட்டும் 
அங்கேயே கிடக்கும்...

தாததா ஏன்தான் 
இந்த வீட்டை விற்றாரோ?  

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...