வெள்ளி, நவம்பர் 11, 2011

இருப்பதும் இல்லாததும்...


சிறகுகூட சுமைதான்

இறகு இறகாய்
உதிர்த்துவிடலாம் ...

உதிரும் இறகை
தொலைதூரக்
கிராமத்துக் குழந்தையொன்று
சொத்தாக சேமிக்கக் கூடும்..
மெத்தனமாக
வயசாளி ஒருவர்
காது குடைய வைத்துக்கொள்ளலாம்

கனமின்றி
காற்றில் மிதக்கையில்
யாராவது படம் பிடிக்கலாம் ...
வீண்குப்பை
என
பெருக்கித் தள்ளி
கொளுத்தியும் விடலாம்...

எப்படியாவது
இருந்துவிட்டுப் போகட்டும்
பறக்காத சிறகு.... 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...