ஞாயிறு, நவம்பர் 20, 2011

இன்று விடுமுறை விடவில்லை..

மதயானையாக
இலக்கின்றித்திரியும் கருமேகங்கள்...
வானின்று வீழும்
நீரெல்லாம்
வாகனம்   கழுவி வழிய
பழுப்பேறிய கோடுகளோடு குளிக்கும்
பெருவழிச் சாலை

சீருடைப்பட்டியலில்
சேராத மழைக்கவசங்களால்
வாகனந்தோறும்
வர்ணச்செண்டுகள்

வாரி அடைக்க
வாயில் திறக்கிறான்
பள்ளி வாயிலோன் . 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...