திங்கள், நவம்பர் 21, 2011

கனவிலோடும் கவிதை...


கண்ணாடி...
மின்விசிறி...விளக்கு...
உறக்க சம்பிரதாயங்கள் 
தொடரும்போது 
ஜன்னல் பூனையாய்
ஒரு வரி.....

போர்வையின் வெளியே 
கண்கள் 
மின்னியபடி காத்திருப்பதான
பாவனையில் 
தலையணை அடியில் 
தள்ளிவைக்கவும் 
முயன்றேன்...

விழித்தபோது 
பூனை 
ஓடிவிட்டிருந்தது....

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...