வெள்ளி, நவம்பர் 11, 2011

சொல்லிக்கொண்டார்கள் ....

புடைத்த
கழுத்து நரம்பிலிருந்து
முதலில்
கொசு...
பிறகு தேள் ...
நெளிந்து துள்ளிய பாம்பு
டினோசர் கூட ...
எச்சில் குருதியோடு
எங்கும் புரள்கின்றன...
எது
யாரைக் கடித்தது?
யார் அடித்தார்கள்?
சம்பவங்களாகி
பதிந்து கிடக்கிறதாம்...

விழி தெறிக்கப் பார்த்தாலும் ...
கிடந்த இடம்
வந்த வழி
புலப்படவில்லை..
ஆனால்...

எல்லாம்
சொல்தானாம்....!

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...