செவ்வாய், நவம்பர் 29, 2011

சும்மா இரு...

நிறமற்ற மண் மீது
பெருவெளிச்சம்
படரப் படர ....
சோம்பல் முறித்து
நிமிரும் கிளைகள் ...

கிளை இடுக்கு நீரை
பறவை உலுக்க
சிறுமழை...
திடுக்கிட்டு
அண்ணாந்த வேருக்கு
அருகிலமர்ந்து
சமாதானம்  சொன்னது
இணைப்பறவை.....

ஈரச் சிறகை உதறி உதறி
இடம் மாறி
வெயில் காய்ந்து
"இப்ப எங்க போனே...
வம்பு பேச மழை தேடியது
முதற்பறவை ....

:சும்மா இரு
அலகால்  ஆகாயம் திறந்தால்
இரை தேடல்  இம்சை
கடிந்தது இணைப்பறவை .... 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...