ஞாயிறு, நவம்பர் 20, 2011

ஒளிச்சேர்க்கை


இந்த கோவை இலை
சிலேட்டு துடைக்கப் 
பறிக்கப்பட்டிருக்கிறதா...

இந்த மா,புளி,கொய்யா 
கல்லடிபட்டு 
செங்காய் உதிர்த்திருக்கின்றனவா..

இந்த மருதாணி
இலை பழுக்க வாய்ப்பிலாது
துளிர்க்க துளிர்க்க
உருவப்பட்டிருக்கிறதா ...

இந்தவேம்பின் கீழ்
துணிவிரித்து உலுக்கி
பூ ,பழம் வாரப்பட்டிருக்கிறதா,..

இந்த இலந்தைமுள்
இளரத்தம் பார்த்திருக்கிறதா...
ஆமெனில் 
இவற்றோடு 
வாழ்க்கை -இருந்திருக்கிறது.
இலையெனில் -இறந்திருக்கிறது. ,

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...