செவ்வாய், டிசம்பர் 13, 2011




அபி உலகம்-2
அபி இருப்பதில்லை  
அபி நாயே
அபி சனியனே
அபி எருமை
என்றெல்லாம்
விளிக்கும் வீடுகளில்
அபி இருப்பதில்லை....!
**************************
அவள்
எப்போதும் யாவர்க்கும்
அபிக்குட்டி
அபிச்செல்லம்
அபி பாப்பா 
அபிம்மா....
*****************************
அபியை ஆசீர்வதியுங்கள் 
சுடும் தொடுகையோ 
கொடும்பார்வையோ 
அவள் உடல் மேவாமல் 
குழந்தைமை திருடும் 
அவலம் படராமல் 
பத்திரமாய் 
பருவம் கடக்க....

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கவிதை அருமை! சேலை கட்டிய தேவதையும் அருமை!
பகிர்விற்கு நன்றி சகோதரி!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

உமா மோகன் சொன்னது…

nandriyum vanakkamum

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...