ஞாயிறு, டிசம்பர் 04, 2011

நூல் கயிறானது


உன் வினாக்கள் எல்லாம்
என்
விடை தேடியே பிறந்தன ....
***********

நானும் நம்பினேன்
நீயும் கூட !
உன் வினாக்களின் விடையே
நான் தருபவைதான் என...
*************

வினாக்களின்
நூல் நுனி
தொடர்ந்து
விடைஎடுப்பதே
வழக்கமானது......
*****************

நூல் திரிந்து
திரிந்து ...திரிந்து
கயிறானதைக்
கவனிக்கவேயில்லை 
நீ 
நானும் கூட ....
**************

இன்று 
வினாக்கள் 
சாட்டையாகவும் 
விடைகள் 
பம்பரமாகவும் 
சுழல்கின்றன....
************************ 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...