திங்கள், டிசம்பர் 05, 2011

சருகு உலர்தல்

சென்ற பண்டிகையின்
புதுப்பட்டு
வாங்கி
நான்கே முறை அணிந்த
பவழ மோதிரம்
வங்கிக்கணக்கு ....
திசையெங்கும்
முளைக்கும் கரத்திலொன்று
இருளுக்குள் அமிழ்ந்து 
கனக்கும் 
முதியவள் 
முதுகு நிமிர்த்தி 
ஈரம் துடைக்க 
காத்திருக்கிறாள் 
கனவு தொலைந்த கண்களோடு...
***********************
ஏதிலியாய்க் 
கிடப்பவள் 
ஈரப் பிரக்ஞை
உதிர வேண்டியது 
முதல் வரம்.
இறப்பு....
இரண்டாவது. 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...