திங்கள், டிசம்பர் 12, 2011

அபி உலகம்.......

அபிக்குப் புரியவேயில்லை
அக்கம்பக்கம் ,நட்புவட்டம்
ஊரிலிருந்து வரும்
உறவுகளைக்கூட
அவள்
ஆன்ட்டி என்றே
விளிக்கிறாள்.......
அம்மா அழைக்கும்
அத்தை ,சித்தி ,மாமி
பெரியம்மாக்களை
தான்
எப்போது சந்திக்கப் போகிறோம் என...
*******************************

அபிக்கு குழப்பம்
அம்மா போல
சூசன் ஆண்ட்டியும்
சூசன் ஆண்ட்டி போல
அம்மாவும்
புடவை வாங்கினார்கள்
தோடு,தொலைக்காடசி,
நாற்காலி,செருப்பு .....
எல்லாம் வாங்கினார்கள்......
ஆனால்...
தீபாவளி இனிப்பும் ....
கிறிஸ்துமஸ் மரமும்.....?
********************************
அபிக்குப் பிடிப்பதில்லை...
உடைந்துவிடும்
என்று பயமுறுத்தி
அம்மா பத்திரப்படுத்தும்
பொம்மையும் சாமானும்
பரிசளிக்கும்
எவரையும்....
********************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...