வெள்ளி, மார்ச் 16, 2012

போக்குவரத்து நெரிசல்

    
எதிரிலுள்ள 
 
அடுக்ககத்தின்
 
பின்பக்கத்திலிருந்து  கிளம்பி,
 
மின்வடம்,தந்திவடம்
 
அளவிலாக்குடியில் தன்னிலை
 
இழந்த பாதசாரிபோல்
 
அண்ணாந்து கிடக்கும்
 
தொலைக்காட்சிக்குடைகள் 
 
அலைபேசிக் கோபுரங்கள்,
 
வழிமறித்து வேடிக்கைபார்க்கும்
 
நட்சத்திரங்கள் தாண்டி 
 
கண்ணுக்கெட்டும் 
 
ஜன்னல் சதுரத்துக்குள் 
 
நிலா 
 
வந்து சேரும்போது 
 
இரவு உணவு நேரமாகிவிடுகிறது ! 
 
                   12.3. 12  உயிரோசையில் வெளியானது  

2 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

நிலவை ரசிக்கும் வேளையில் வந்தால்தானே நிலவும் அழகு.

பாராட்டுகள் மேடம்.

உமா மோகன் சொன்னது…

காத்திருந்து காத்திருந்து
காலங்கள் போகின்றன..
மேடம் தவிர்க்க வேண்டுகிறேன்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...