வியாழன், ஏப்ரல் 19, 2012

மன்னிக்கவும்..வர இயலாது

ஏப்ரல்13  அதீதம் இதழில் வெளியான கவிதை

மஞ்சள் மலர்
கொட்டும்
பாதையைத்
தாண்ட வேண்டியிருக்கிறது…
****************************
என் பாதணி ஒரு தடை ….
வெற்றுப் பாதங்களோ
அழுக்கும் வெடிப்புமாய் …
மெத்தென்று சிறிதாய்
 மாற்ற வழியுண்டா
தெரியவில்லை..
கட்டைவிரல் நுனி
ஊன்றித் தாண்ட
சிறு தொலைவுமில்லை…
****************************
உதிர்ந்து
காற்றில் அலைந்து
என்முகம் மோதித்
தாண்டும் சருகு ,
ஆடைதொட்டு விலகி
உதிரும்
செம்பழுப்பு இலை
இரண்டும்
பரிகசித்துப் போனாலும்
பரவாயில்லை…

2 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

வசந்தகால சந்திப்புகளில் இப்படி அடிக்கடி நேரலாம். அத்தனைக்கும் இப்போதே மன்னிப்பு கேட்டுவிடலாம். கொட்டிக் கிடக்கும் பூக்கள் மிதித்துப் போக எனக்கும் சம்மதமில்லை.

அழகானக் காட்சிக்கவிதை.

உமா மோகன் சொன்னது…

ஆம்,பாதைமிருதுவாக இருக்க பூத்தூவி வரவேற்பதுகூட சரியில்லைதானே கீதமஞ்சரி.
வருகைக்கும் பதிவுக்கும் நன்றி

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...