வியாழன், மே 03, 2012

பயண வழியில்.....

  ஏப்ரல்30 உயிரோசையில் வெளியானது

 
ஓடத்தின்
நுனிப்பறவையாகவும்.,

நீர்விழு நிழலாகவும், 

தூரவானின் சாட்சிப் பறவைகளாகவும் ,

தொடாது போகும் மேகமாகவும் ,

தொங்கும்

கூண்டு விளக்காகவும்,

 அதனுள்ளிருக்கும்

 துளி ஒளியாகவும் ,

ஓட வளைவாகவும்,

நீர் கிழிக்கும் துடுப்பாகவும்,

 ஓடா நீல அலையாகவும்,

 எவ்வெப்போதோ

 நான் இருந்திருக்கிறேன்.....

ஓடத்தினுள்
சாய்ந்திருந்த நினைவு மட்டும் இல்லை...

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...