செவ்வாய், ஜூன் 05, 2012

பொருள் விளங்காப் புள்ளிகள்

 
தொடக்கத்திலேயே 
முடிவும் 
சேர்ந்துதான் இருக்கிறது.
கேள்வி,ஆச்சரியம் 
இரண்டின் கீழும் 
இடும் புள்ளிகள் 
இணைக்கவும் ,பிரிக்கவும் 
தெரிந்து வைத்திருக்கின்றன ....
தோளில்
ஆட்டுக்குட்டியோடு 
வனமெங்கும் 
புள்ளிக்குப்பின் 
போய்க்கொண்டே......இருக்கிறோம் 
முடிவுறாப் பயணமாக.... 

2 கருத்துகள்:

கீதமஞ்சரி சொன்னது…

ஆட்டுக்குட்டிகளைத் தோளில் போட்டுக்கொண்டு வனமெங்கும் தேடித்திரியும் நமக்கு கண்ணெதிரில் இருக்கும் வாழ்க்கை மட்டும் எங்கே புலப்படப்போகிறது? தேடித்தேடியே சோர்ந்துபோகிறோம். அருமை சக்தி.

உமா மோகன் சொன்னது…

சோர்வின் வெம்மையில்,இப்படி இனம் காணும் தோழமை நிழல் இதம்.நன்றி கீதா

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...