ஞாயிறு, ஜூலை 01, 2012

எனது கோப்பைகள் நிரம்பிய அந்தரம்

குவளைகளில் 
என்ன நிரம்பியிருக்கிறது...
உதடு தீண்டும்வரை புலனாகாது !
கற்பனைகளை 
உடைக்கும் 
உப்பிட்ட வெந்நீர்!
"தொண்டைக்கு இதம்"
அசட்டுச் சிரிப்புடன்,
குறிப்பு சொல்லி 
ஏமாற்றமும் சேர்த்து கொப்பளிப்பேன் ....
குவளையின் அழகும்,
வடிவும் பார்த்து ,பரவசத்தில் 
தாகம் மறப்பேன்...
குளிர் நீரோ,பானமோ 
பகிர்வாய் என 
ஆடும் குவளைகளின் முன் 
கால்கடுக்கிறேன் ...
நீ காத்திருப்பது 
கைகூப்பலுக்கா?

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...