செவ்வாய், செப்டம்பர் 18, 2012

வழியும் நிழல்கள்


ஒட்ட நறுக்கியபோது 

சட்டமிட்டிருக்கலாம்...

ஓரப்பிசிறுகள்

வழிய வழிய ...

முக்கோணம்..

நீள்சதுரம்...

செவ்வகம்...கோளம்... 

விரிந்து,வளர்ந்து,வளைந்து .....

கொண்டேயிருக்கிறது 
.........................
நிழல்!

நறுக்கிய நிழல் 
உற்சாகம் கொப்பளிக்க உயர்ந்து 
தலைக்குமேல் 
சிரிக்கும்போது,
சிறுநடுக்கம்....

தள்ளிவிட்டும் சிரிக்குமோ...?

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வித்தியாசமான சிந்தனை வரிகள்... ரசிக்க வைத்தது...

உமா மோகன் சொன்னது…

நன்றி தோழர் வருகைக்கும் வாழ்த்துக்கும்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...