வியாழன், அக்டோபர் 18, 2012

நான்... நான்... நான் ....

  

சின்ன அத்தை போல்  
செவிமடல் ..
வம்சமே ஏறிய  நெற்றிமேடு ..
பிசிறடிக்கும்  பல்வரிசை ,
தலைசாய்த்த உரையாடல் 
ரெண்டுமே தாத்தாவழி ...
வரிக்கு வரி "ம் "போடுவது 
ஆச்சியின் வழக்கம் ..
பெயரின் பின்வால் 
தலைமுறைச் சிந்தனைகளை 
வெட்டி ஒட்டியது !
ஆகிருதி கூட்டும் ஆடைகள் 
அவ்வப்போதைய நடைமுறைப்படி ...

"நான் "

என்னிலிருந்து பிரிவதுமில்லை 
என்னில் உறைவதுமில்லை...                              

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல வரிகள்...

படம் சூப்பர்ப்...

ரேவகீஸ்வரி சொன்னது…

சுவடுகள் அருமை!!!

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...