சனி, ஜனவரி 05, 2013

நுழையா விருந்து




தேநீர்ப் பித்து
குளம்பி பக்தி
பால்மாப் பாலகர்
எல்லோருக்குமென
எடுத்தெடுத்து வைத்த
உறைபிரிக்காக் கோப்பைகளுக்குத்
துணை
சேர்த்துக் கொண்டேயிருக்கிறேன்
என்றேனும் பரிமாறும்
நம்பிக்கையில்..,
உன் புன்னகையில் தெரியும்
இகழ்ச்சி
என் கண்ணுக்கு தெரியும் .
என் விதைகள்
முளைவிடும் என்பதையோ
நீயும் உன் புன்னகையும்
அறிவதில்லை...

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...