செவ்வாய், மார்ச் 05, 2013

காவல் என்றொரு நம்பிக்கை

மின்னுவதற்கு நேரமிலாததால்
கனவுகளுக்கு
நட்சத்திரப் பூட்டு ......


சிறகடிக்க வாய்ப்பிலாத
கவிதை
வண்ணத்துப் பூச்சியின்
சிறகுகளுக்குள் ....


கரைய முடியாத
கற்பனையை
மழைத் துளிகளின் தண்மையிடுக்கில்
.............
 பூட்டிவிட்டேன்.... ம்ம்ம்ம்ம்
இருப்பிடக் குறிப்புகள்
இதோ பொதுவெளியில் .....
இலக்கமிலாச் சாவி
இருப்போர் வரலாம்
புதையல் வேட்டைக்கு.....

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எங்கள் ஊரில் இல்லாத பூட்டு... ஹிஹி...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...