செவ்வாய், மார்ச் 05, 2013

இங்கும் வருகிறாளா ?


உதயம் உவப்பாய்த்தான்
தொடங்குகிறது....
உன் கருணையின் ரேகை போல்
இதமான உஷ்ணமும்
ஆரஞ்சு வெளிச்சச்சிதறலுமாய் .....!

நேரப் பந்தயத்தை
நிறுத்தி
முள்ஒடித்துப் போடேன் ..

காம்போடு விடைகொண்டு
தூசுபோல்
காற்றின் திசையில் -
மலர் திரிந்து மிதந்து அலைகிறது .....
ஒற்றை இதழின்
 நடுக்கம் போதாதா
 உன் உறக்கம் கெட

இற்றுப் போவதன் வலி அறியாமல்
என்ன பரிபாலனமோ ....

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஏங்க வைக்கும் தவிப்பு...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...