சனி, மே 11, 2013

மன்னித்துவிடுங்கள்..


இது போதும் எனச் சொல்லும்
அதிகாரம் எனக்கில்லை ..
வேண்டும் என்பதும்.....



நானே விலகிடினும்
நிழலைப் படம்பிடித்துக்
கொண்டாட ஏழு பேர் குழு
அமைத்தாகிவிட்டது....


ஒளியின் வீச்சை
உள்ளங்கை மடங்கலில்
பிடித்துவிட்டதாக
அல்பதிருப்தி..


சொர்க்கத்தில் பறவைகள்
இப்படித்தான் சிறகடிக்கும்
என்கிறான் -தானே
 தானியம் இறைத்தவன்போல் ...


ம்ஹூம் 'என்பதை
ம்'என்றும்
'ஐயோ'என்பதை
'ஆஹா'என்றும்
மொழிமாறாட்டம் நடத்துகிறது
நாவு..


ஆன்ம ஒளி குறித்த
சொற்பொழிவாற்றத் தயாராவதால்
கடவுளுக்கு
இன்று நேரம் தர இயலாது

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// தானே தானியம் இறைத்தவன்போல்... ///

அருமை...

தொடர வாழ்த்துக்கள்...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...