செவ்வாய், ஜூன் 11, 2013

ஆறுதல் நன்றன்று

ஒரு பேரன்பை ,
ஒரு புன்னகையை,
ஒரு முத்தத்தை,
ஒரு பரவசத்தை,
ஒரு பூக்கணத்தை ,
ஒரு  மகிழ்பொழுதை ,
ஒரு பாடலை,
ஒரு கவிதையைக்
கொண்டாடும் -அதே கனத்தோடு ,
ஒரு புறக்கணிப்பை,
ஒரு துரோகத்தை,
ஒரு சீற்றத்தை,
ஒரு சீண்டலை,
ஒரு துன்பத்தை,
ஒரு விம்மலையும்
தாங்க முடிந்தால்
என்ன சொல்வீர்,.....

***************************


பச்சைத் தேநீர்
இன்னும் ஒரு மிடறு பாக்கியிருப்பதால்
நீ எதி
ர்பார்க்கும்
விடை சொல்வது கடினம்
....

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிரமம் தான்...

G.M Balasubramaniam சொன்னது…


" அதே கனத்தோடு?” ஒருபோல் நினைக்க முடிந்தால்.... அதற்குத்தானே முயற்சி செய்து கொண்டே ஏஏ..
இருக்கிறோம்.?

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...