வெள்ளி, ஜூலை 19, 2013

கூழாகாக் கல்


 நிறமும்
தத்துவமும் தோற்றமும்
மாயையும் கண்டுபிடிப்பும்
வரிசையும் ஒழுங்கும்
பாடமும் படிப்பினையும்
கற்பனையும் காட்சியும்
....
ஏதாவதொன்று தேடும் உன் கண்ணில்
படுமுன்
உடைவதும் உருளுவதும்
தேய்வதும் திரள்வதும்
சிதைவதும் சிக்குவதும்
புதைவதும்
போய் ஒழிவதும் என
எதுவுமே பொருட்டாக இலா
வாழ்வு -இன்று
மழுங்கலே  அழகென்றானது
மறந்துவிட்டது -
சீராக இல்லாமல் கூராக இருந்தது

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...