திங்கள், ஆகஸ்ட் 12, 2013

சிறகின்துயர்..

சிறகு வேண்டுமேயென
வினா எழுப்புவார்கள்


ஒருபோதும் மிதக்கவியலா
கல்மனசுக்காரர்கள் ...

மரகதம்..கோமேதகம்
உயர்நீலம் என்றெல்லாம்
விலைப்பட்டியல் விம்மினாலும்
கற்கள் மிதப்பதும் பறப்பதும்
சாத்யமில்லை  என
சிலிர்த்தபடி
சிறகுகள் பறந்து செல்கின்றன.
ஆன்மாவின் கோபுரத்தில்
அவை இளைப்பாறிச்
செல்வதை  வெறித்தபடி
தேங்காய்ப் பத்தை கடித்துப்
போகிறான் பிச்சாண்டி 


மிதந்தலையும் சிறகுக்கு
மனசென்ற மறுபெயர்
அவன் சூட்டுவதில்லை
பிரபஞ்ச இருளுக்கு
வெளிச்சக் கண்கள் பொருத்திச்
சிறகுகள்
திசையறிந்து அலைகின்றன...
உயரே உயரே...


உயரங்களெலாம் அன்பு சிந்திப்
பொலிவதைப்
பிச்சாண்டியைப் போல
நீங்களும் உணராது விலகுவதுதான் 


சிறகின் நாளைய துயர்....

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...