ஞாயிறு, செப்டம்பர் 14, 2014

வாய்ப்பினால் ஆனது





அச்சத்தின் துளிகளால்
எனது பெருங்கடல்
தளும்பிக்கொண்டிருக்கிறது.
எப்போதும் வறண்டுபோகும்
வாய்ப்புடன் அமுதம்
ஒரு குட்டையில் ..
அமுதம்
பருகக்கூடிய வாய்ப்பை
அலையாடிக் கொண்டிருக்கும்
கட்டுமரத்தின் திரைச் சீலையில்
முடிந்திருக்கும் சாவி கிட்டியவுடன்
திறப்பேன் என்கிறான்
அங்கே தூண்டிலோடு
திரியும் கிழவன்.
எனக்கோ அவன் தனது
ஓட்டைக் குவளையில்
நிரப்பியது போக மீதமிருப்பது
அமுதக்குட்டையின் கானல் நீரே
என்றஎண்ணம்.
கட்டுமரம் அசைந்துகொண்டிருக்கிறது
அசைவின்றித் தூண்டிலோடு
குந்தியிருக்கிறான் கிழவன்
 
 
2014 ஆகஸ்ட்  11 திண்ணை இணைய இதழில் 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...