திங்கள், ஏப்ரல் 13, 2015

பயணங்கள் முடிவதில்லை

மனிதர்களுக்கென்ன

ரயிலேறிப் போய்விடுகிறார்கள்  


கசிந்த கண்ணீருக்கும்

குலுக்கிய கைகளுக்கும் 

மென்தழுவலுக்கும் 

மௌன சாட்சியாய்க் கிடக்கும் 

நடைமேடையையும் 

உயரத் தூண்களையும் 

கழிப்பறை வாடை கருதாமல் 

பூவும் பிஞ்சும் உதிர்த்தபடி 

நிற்கும் 

பெயர் தெரியா இம்மரத்தையும் 

என்ன செய்வது…..


சனி, ஏப்ரல் 04, 2015

4 4 15-முகநூலில்

அவ்வளவு எளிதாக இருப்பதில்லை...தளைகளைத் தளர்த்திக் கொள்வது...
******************************************************
ஒரு புன்னகையால் 
உயிர்ப்பிக்கலாம் 
ஒரு புன்னகையால் 
கொல்லலாம்
புன்னகையால் மட்டுமல்ல....

*****************************************************
சொல் 
எல்லாம் 
சொல்லிவிடுமா

*****************************************************
நம்பிக் கொண்டே 
நடக்கிறோம் ...ப்போம்
எங்களுக்குத் தெரிய வேண்டாம் 
வேறெதுவும்

***************************************************
துயரங்களின் 
பின்வாசல் மட்டும் 
தெரிந்தால் போதும்

**************************************************
தேடிக் கொண்டிருந்தது
உண்மைதான்
இந்தப் பல்லி ஒலிக்காமல்
போய்த் தொலைந்திருக்கலாம்
***************************************************
நீளும் வரிசை 
முடிவதை நினைத்தால்தான் 
அச்சம் 
தொடக்கத்திற்குப் போய்விடவா...
******************************************************
யாராவது சொல்லுங்கள் 
எல்லாம் பொய் என்று 
யாராவது சொல்லுங்கள்
எல்லாம் முடிந்தது என்று 
யாராவது சொல்லுங்கள்
எதுவும் நடக்கவில்லை என்று
யாராவது சொல்லுங்கள்
எதுவும் சொல்ல வேண்டாமென்று
***********************************************************
திறப்பாய் 
என்று காத்திருக்கையில்
இன்னொரு பூட்டு
*********************************************************
விட்டுவிடலாம்தான் 
விட்டால்
*****************************************************
இருப்பு 
இருப்பது மட்டுமன்று
********************************************************
ரத்தத்தைவிட
அடர்த்தியான கண்ணீரையும்
வழித்தெறிகிறது
அதே விரல்
துடைத்தெறிகிறது 
அதே கைக்குட்டை
காய்ந்துவிடும் எப்போதும்போல்
********************************************************
4 4 15-முகநூலில் 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...