ஞாயிறு, அக்டோபர் 11, 2015

என் பெயர் நீலா

ருந்தி வருந்திச் சொல்கிறீர்களே 
என்றுதான் வாங்குகிறேன் 
டென்ஷனும் செலவும் நீள நீள
பத்துக்கு நாலு ஸ்கின் ப்ராப்ளம் ..
 
கரைத்துக் கரைத்து ஊற்றினாலும் 
நான் வளர்கிறேன் 
எனக் குதிக்காத பிள்ளை 
உங்களைப்போலவே  கிண்ணத்தில் குழைத்து 
ஊட்டியபோது களுக்'கெனச் சிரிக்காமல் 
தூவெனத் துப்பி,விழுங்கினால் 
வீறிட்ட செல்வமல்லவா 
 
அழுக்கு நைட்டியும் 
அதில் துடைத்த ஈரக்கையுமாக ஏற்றினால் 
டிசைனர் சுடிதாரில் வந்து சிக்கெனக் 
கொளுத்தாத காரணத்தால் 
கொசுக்களும் மடிவதில்லை 
 
நானும் யோசிக்கிறேன் 
குடும்பத்தலைவியாய் உணரமுடியாமல் 
வேலைக்காரிபோல் 
திரிவதன் காரணம் 
பிளாட்பாரம் நைட்டிதானோ என...
 
நிஜப்பெயரில் இதெல்லாம் 
பகிரமுடியாமல் 
புனைப்பெயர் சூடினேன் நீலா என்று ..
 
ஐயோ ..இதென்ன 
இந்தப் பெயருக்கு 
இத்தனை போட்டியா

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...