வெள்ளி, அக்டோபர் 16, 2015

தலைவிதி

பன்னடுக்கு மருத்துவமனையின் 
ஏதோ ஒரு தளத்திலிருக்கும் 
உணவியலாளரிடம்
பத்தியப்பட்டியல் குறித்து,
மின்தூக்கி எதிரில்சிரிக்கும் 
பிள்ளையாரிடம் கன்னத்தில் போட்டபடி 
சிறப்பு மருத்துவர் முன் 
பவ்யம் காட்டி,
எதிர்ப்படும் காவலரிடம் 
அகால நுழைவுக்கான அபராதம் 
கையழுத்திவிட்டு ,
மூச்சு வாங்க வந்த வேகத்திலேயே 
ஆரஞ்சு  பிழியும் நேரம் 
தலைவிதி பற்றிப் புலம்ப 
ஏராளம் இருந்தது 

அடகும் அட்டை உரசலும் 
சண்டையைக் கூட சாத்தியப் படுத்தின

அடகுக்கும் ஏதுமின்றி
அட்டைக்கும் வழியின்றி
மஞ்சள் குங்குமம் குவிந்த
மரத்தடி அம்மன் முன் நின்றபின்
நீளும் வரிசையின் கடைசியில்
நின்று
படுக்கையும் பாயும் கூட இன்றி
நடைபாதையில் கிடக்கும் இடத்துக்கு
பங்கம் வந்துவிடுமோ என்ற
பதட்டத்தோடு சுருண்டவன்
வலிமுகம் சொன்னது
தலைவிதிக்கு விளக்கவுரை

1 கருத்து:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அற்புத வரிகள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...