வெள்ளி, நவம்பர் 20, 2015

முகநூல் துளிகள் -3




பசி ருசியை
ருசி பசியை
பசி பசியை
ருசி ருசியை
எதையாவது எதுவாவது
வென்றுதான் ஆகவேண்டுமா சனியன்
*******************************************************
வேர் வைத்தியமாகும் 
வேருக்கு ?
*****************************************
எல்லாவற்றையும் எப்போதோ 
சொல்லிவிட 
வாய்க்கிறது உனக்கு 
எப்போதும் இல்லை எனக்கு
*********************************************
கொஞ்சம் உப்பு போடு 
பரிச்சயமான பொய்
எப்போதும் சகிக்காது
******************************************
99.9 சதவீத வாய்ப்புகளில் 
நம் சுத்தம்
நம் வாழ்க்கை 
நம் சிறுமை 
0.1எவ்வவ்வ்வளவு பெரிதாயிருக்கிறது

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...