திங்கள், நவம்பர் 02, 2015

எரிகிறது எம் வயிறு

கர்ப்பப் புளிப்பெனக் கேட்கையில்
கசியக் கற்றுக்கொள்ளா
கல்லானவன்
கருவின் சுமையழுத்த
இரங்கா நீரால்
சுரக்கும் பாதகனம் பார்க்காதவன்
முதல் வீறலின் தேவகானம்
கேட்காதவன்
குப்புற விழுந்து தலைதூக்கிப்
பார்க்கும் பார்வையில் சொக்காதவன்
ஆயுளில்
ஒரு மழலைத் தீண்டல் பெறாதவன்

இவனெல்லாம் கூட
ஒரு தீச்சுடர்
தொடமாட்டான்
குழந்தையிருக்கும் கூடு கொளுத்த

எங்கிருந்து வந்தீர்கள்
ஒரு தாயின்
கர்ப்பத்திலிருந்து என்று மட்டும்
சொல்லாதீர்கள்
அழுக்குத் திரள்களே

பரிதாபாத் பாதகத்தின் பின்  எழுதப்பட்டது

1 கருத்து:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

அற்புத வரிகள் படித்து மகிழ்ந்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...