திங்கள், நவம்பர் 02, 2015

வளைவு அழகல்ல

தன்மேல் ஏறியிறங்கி விளையாடி
பக்கத்து வாய்க்காலில் நழுவி விழுவது
சாரையா கட்டுவிரியனா

அரைஅடி தள்ளி நிற்கும்
எருக்கு ஏன்கிளையை
இடிப்பதுபோல் நீட்டிக் கொண்டு
பூக்கிறது

கண்ணுக்கெட்டிய தூரம்
படர்ந்து  கிடக்கும் அருகு
இந்த வேர் ஓரத்தை
விட்டு வைத்தால்தான் என்ன

எப்படியும் வெட்டத்தான் போகிறார்கள்
இந்தப்பக்கத்து வாரிசு
இடிக்காமல் மட்டையைப்
பதவிசாக விரித்தால் நல்லதாச்சே

ஒரு புகாரும் கேள்வியும்
இல்லாமல்
வளைவும் சொகுசாக நிற்கும்
பனை ஏதாவது சொல்ல வருகிறதா

மன்னிக்கவும்
அதை நீங்களே கேளுங்கள்


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...