புதன், ஜனவரி 06, 2016

டிசம்பர் பூக்கள் -3



ஒருசிரிப்பு
ஒருஅழுகை
ஒருதேம்பல்
ஒருஆகாகாரம்
ஒருகையசைப்பு
ஒருபிரார்த்தனை
ஒருதலையாட்டல்
எனக்கானது
எது
****************************
இருத்தல்முக்கியம் உனக்கு
நகர்தல் முக்கியம் எனக்கு
நகர்ந்துகொண்டேஇருக்கக்
கற்றுத் தருகிறது உலகம்
**********************************
சொல்லிவிட்டுப் போய்விட்டாய் 
தொட்டுப்பார்த்தேன் 
கொதிக்கிறது
*************************************
சாதாரணத்துக்கும்
அசாதாரணத்துக்கும்
இடையில் நடை 
அழைக்குமுன்
அவகாசம் வேணும்
கூத்தாடிக்கம்பை ஊன்றி இறங்க
***********************************
போகட்டும்
சுருட்டி எறிந்தால் குப்பை
காலியாய் விடு
*****************************
நட்சத்திரம்
நிலா
வெளிச்சம்
காற்று
பரவசம்
கதவு திற முதலில்
*************************
சொல்லிவிட்டு
அதுநயம்
என்பதும்
நீயே சொல்கிறாய்
******************************
பெருமிதம்
கர்வம்
சிறுகோடு
அடக்கம்
************************
சரசரவென்று ஓடியது 
பார்த்தேன் அணிலை 
இரவில் இது என்ன செய்கிறது 
அதுவும் பார்த்துதான் போனது

**************************
அவ்வளவே
ஏலாது இனி என நின்ற
கணங்கள்
மீட்டிக்கொள் மனதில்
எழுந்தது புரியும்
********************************
அருகிலிருக்கும்
தொட்டிச்செடி உதிர்வதும்
உலர்வதும்
அறியாது 
நீர் இறைக்கிறாய்
தூரத்துப்பச்சைக்கு
******************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...