புதன், ஜனவரி 06, 2016

நடப்பு

உலகம் வெகுஅழகானது
மக்கள் யாவரும் மகிழ்வோடு
இருக்கிறார்கள்
வேண்டுதல் வேண்டாமை இன்றி
கைகுலுக்குகிறார்கள்
பரிசுதருகிறார்கள்
அணைத்து விடைபெறுகிறார்கள்
ஒருதேவலோக புகை மிதக்க
இசையும் நறுமணமும் அடடா...
அத்தனை நிறங்களிலும் மலர்கள்
அத்தனை மரங்களிலும் கனிகள்
தூவிய விதையெல்லாம்
பழுதின்றி கதிராகிச்சாய்கிறது
இதெல்லாம் அவர்களின்
இப்போதைய நினைவு
உங்களிடமும் சொல்வார்கள்
அட்டை எடுத்துச்சென்று
அங்கீகரிப்பீர்கள்
அல்லது நிகழ்ந்துவிடுமெனக் காத்திருப்பீர்கள்
உங்கள் விரல்நுனிக்கறை
விரைவில் அழிந்துவிடும்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...