புதன், ஜனவரி 06, 2016

நிறமாலை


அடிவயிற்றிலிருந்து
குரலெடுத்து அன்னையின் மரணத்தில்
கட்டியழுத சித்தியின் 
கத்தரிப்பூ சேலை நிறமா
வளர்வதற்கெல்லாம் முன்பு
பிள்ளைகள்
உருட்டிப்போடச்சொல்லி உண்ட
பொட்டுக்கடலைத் துவையல் சோற்றின்
மங்கிய சந்தன நிறமா
ஊசுட்டேரிக்கரையில்
தருவதான பாவனையில்
தாய்க்குக்காட்டி தான்ஊட்டிக்கொண்ட
குழந்தையின் பிஸ்தா பனிக்கூழ் நிறமா
பாராமல் கடந்துசெல்லும்
போக்கு தாளாமல்
நீலத்தையும் பச்சையையும்
துறந்து நிறமிலியாய்
ஆர்ப்பரிக்கும் பௌர்ணமி அலைநிறமா

அன்பின் கதிர் என்ன நிறம் 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...