வெள்ளி, பிப்ரவரி 05, 2016

பிப்ரவரி பூக்கள் -1

ப்ரியம் பருகி பிரபஞ்சம்
அளவு விரிந்து கிடந்தால்
காதணித் திருகில் 
மடங்கிப்பொருந்துவாயோ
வியக்கிறேன்
அதுவும் முடிகிறது

********************************
புறப்பட்டபோது வழி 
தெரியாதிருந்தது
நீ பார்த்தபின்
கைவிளக்கு 
வழித்திண்ணையில் விட்டுவிட்டேன்

*************************************
என்னுடைய எதற்கும்
நான் அடிமையில்லை
நீயும் சிறகுகளை
உயிரோடு விட்டுவை

***********************************
விலக விரும்பா வாழ்வு
தேடி ரோஜாக்களுடன்
நடக்கிறாள்
கிள்ளியெறிந்த முட்கிளை
காய்ந்து உதிரட்டும்
மறித்து நீட்டாதிரும்

*************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...