புதன், மார்ச் 09, 2016

தலைப்பு இல்லை

கொஞ்சம் அமிலம் கிடைக்கிறதா
தேடிக்கொண்டிருக்கிறான் ஒருவன்
களிமண்ணால்தான் ஆகியிருக்கிறது
முஷ்டி போதும் உடைக்க எனக் 
கை ஓங்குகிறான் ஒருவன்
மெழுகு பொம்மையல்லவா
சிகரெட் கங்கோடு
நெருங்குகிறான்ஒருவன்
கண்ணாடிப்பளிங்குக்கு
ஒருகுச்சிபோதுமென்றும்....
சொல்,வலி,அறிவு,ஆயுதம்
உடைந்தவற்றைத் தடமின்றி
ஒட்டவைத்து எழுகிறாள்
விழுந்திருக்கும் கோடுகள்
புன்னகைஎன்பீர்

1 கருத்து:

Unknown சொன்னது…

கருத்துக்கள் எவ்வளவோ என்று எனக்குத் தெரிந்து கொள்ள நாட்கள் பலவாயிற்று ஆயினும் என்ன இதை பார்க்க தெரிந்து கொண்டேனே என்று இன்ற happy தான் கவிதையை பற்றி கருத்துக்கள் பின்பு

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...