திங்கள், ஏப்ரல் 04, 2016

ஏப்ரல் பூ-2

முகங்களைப் பாராதபோது 
ஓடிக்கொண்டிருக்கிறது
ஒரு நதி
காகிதங்களைக்கிழித்து
படகு செய்து விளையாடிக் 
கொண்டிருப்பவன்
ஒருமுறை கூடவா பார்க்கவில்லை
அதில் இருந்த ஓவியங்களை

**************************************************
ஒரு காட்டின் படம்
யானை போலவும்
ஒரு யானையின் படம்
காடு போலவும் புலப்படுகிறது

படம் காட்டும் வாழ்வுதானே
********************************************
ரயிலின் சன்னல்களை
இறுக்கி மூடுபவர்களை
ஏறி அமர்ந்த உடன்
உணவுப்பொட்டலம் பிரித்து
வாழ்வின் கடைசி உணவுபோல திணிப்பவர்களை
அலைபேசி வழி பிரதாபங்களே துணையானவர்களை
இறக்கி விட்டுவிடுங்கள்
அந்தப்பெட்டிகளெங்கும்
குழந்தைகள் ஏறட்டும்
அசையும் கைகளால்
பாதைகளெங்கும் புன்னகை கீற
************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...