வியாழன், மே 05, 2016

ஏப்ரல் 20 முகநூலில்

கொஞ்சம் பேசிக்கொண்டிருக்க முடிவு
செய்யும்போது தெரிகிறது
பொழுதோ நீயோ
போய்விட்டிருப்பது
***********************************
வேப்பம்பூக்களை
வாரி வாரி எடுத்து வைக்கிறேன்
எங்கோ பூத்திருந்த போது
இழுத்த வாசம் 
இன்றில்லை
**********************************

எப்படி மீண்டேன் தெரியுமா
சிறு தொடுகை ஒன்றால்
அது
நீயன்று-
காற்றிலாடிய சிற்றிலையின் உரசல் எனப் புரியுமுன்
உயிர் ஊறிவிட்டது

****************************************
பூவரச இலைகளைக் குழை
குழையாக ஒடித்துப்போட்ட
ருக்குவிடம்
யாரும் கேட்டதேயில்லை
இதை உன் வீட்டு ஆடுமாடு
தின்னுமா
காயவைத்து சுடுநீர்
வைப்பாயா என்றெல்லாம்

மதிலுக்கு அப்பால் தெரியும்
செம்பருத்திக் கிளையை
இழுத்து மடக்கிவிடுமளவு
இப்போது வளர்ந்துவிட்டோம்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...