புதன், ஜூலை 06, 2016

ஜூன்-18 முகநூலில்

தேக்கு மரத்தின் இலைதான்
ஆனாலும் உதிர்ந்து 
சுருண்டல்லவா கிடக்கிறது
****************************************************
எத்தனை அகலம்
கண்விரியப் பார்க்கும்
இதை என்னவென்று 
சொல்லித்தருவது
அபிக்கு
கொல்லை சாக்கடையளவு
தண்ணீர்கூட இல்லாத
ஒருகாலத்தின் ஆறு
வெறுமையாகக்
காத்திருக்கிறது
மண்டிய கோரையின் கீழ்


***************************************************
காற்றோ
எரிக்கும் வெயிலின் 
கொடுங்கவலையோ
அசைகிறது மரம்

*************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...