வியாழன், செப்டம்பர் 22, 2016

குற்றமாகாது

விடைபெற வேண்டிய தருணத்தில்
மீண்டும் சந்திப்போம் என்றுதான்
நினைக்கிறீர்கள்
அந்ததைரியத்தில்தான்
சொல்லிக்கொள்ளாமல் கிளம்புகிறீர்கள் 
கொடுஞ்சொல்லால் ஒரு கிழி
கிழித்துவிட்டு
எதுவும்நடக்காததுபோல்
உங்கள்ஆடையை சீர்திருத்தியபடி
வாகனம் ஏறுகிறீர்கள்
பார்க்காததுபோல நழுவுகிறீர்கள்
அவசரத்தில்இருப்பதுபோலவும்
ரயில்ஓடத்தொடங்கிவிட்டது போலவும்
விதவிதமான கற்பிதங்களோடும்
பாவனைகளோடும்
நகர்ந்திருக்கிறீர்கள்
மீண்டும் சந்திக்க முடியும்வரை
எதுவும் குற்றமாகத் தோன்றுவதில்லை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...