வெள்ளி, அக்டோபர் 14, 2016

உன்னைப்போல் நான்

நான் பேசுவதேயில்லை
நீயேன் பேசுகிறாய்
என்றபோது வெறுமனே
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
நீ பேசிதான் இதைச் சொல்லுகிறாய் என்பதை
எடுத்துச்சொல்லாது பார்த்துக்கொண்டிருக்கிறேன்
என்னைப்போல் நில்
நட
பாடு..தூங்கு ...கட்டளைகளைக்
கார்ட்டூன் குரலில் சொல்லியபடியே சுழல்கிறாய்
உன்மேலன்றி
என்மேல் எனக்குக் கோபமாக வருகிறது
உன்னைப்பற்றியே நீ
நினைக்கவிடாது
என்னைப்பற்றியே நினைக்க வைத்திருக்கிறேனே என்று.


நிற்க.
இது காதல் கவிதை இல்லை



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...