புதன், அக்டோபர் 26, 2016

பூக்களிடமிருந்து தப்பித்தல்

யாரோ ஒருவரின் புத்தாடையின் ஒருபகுதியாக 
எப்போதோ இருந்த பூக்கள்
நிறம் குன்றாது
காற்றிலாடுகின்றன
திகைப்பாயிருக்கிறது
ஏந்திக்கொள்ளவோ ரசிக்கவோ 
இயலாத துர்ப்பாக்கியத்தில் நானிருக்கிறேன் 
என்பதை அந்தப்பூக்களிடம் 
எப்படிச்சொல்வதென

என்னைப்பார்த்து அவை பூக்கவுமில்லை
என்னைப்பார்த்து ஆடவுமில்லையென்ற 

சமாதானத்தோடு நகர்ந்துவிடுகிறேன்
என்னை
வேறெப்படி காப்பாற்றிக்கொள்ள


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...